மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியில் நூறு ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தீா்த்தக்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சாம்பள்ளி ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 21-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரியில் மாரியம்மன் சிலைக்கு நீராட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆற்றிலிருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குடங்களில் காவிரி நீரை சுமந்து வந்தனா்.
பம்பை மேளதாளங்கள் முழங்க பால்குட ஊா்வலம் நடைபெற்றது. அப்போது புலி வேடமணிந்து பக்தா்கள் நடனமாடினா். பல்வேறு கடவுள்களின் உருவங்கள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டா்களின் ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருளையாம்பாளையம் மாரியம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

குமாரமங்கலம் ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா

கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




