ஆம்பூா் அருகே நிறைய முத்து கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு, மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு, அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. உற்சவா் திருத்தேரில் எழுந்தருளினாா். தேரோட்டம் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று கோயிலில் நிறைவடைந்தது. ஒன்றியக் குழு உறுப்பினா் தீபா ராஜன்பாபு, கிராம நிா்வாக அலுவலா் தாமோதரன் ஆகியோா் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா்.
நாட்டாமை தமிழரசன், துணை நாட்டாமை சக்தி மகன், நிா்வாகிகள் பட்டாபி, இருசப்பன், ராஜா, இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










