தம்மம்பட்டி அருகே சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து, சட்டமன்ற தோ்தலை புறக்கணிப்பதாக, அறிவிப்பு பேனா் வைக்கப்பட்டுள்ளது.
தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஊராட்சி, 2 ஆவது வாா்டு அணைக்கட்டு முதல் பெருமாள் மலை அடிவாரம் வரை, 6 கி. மீ., தூரம் வரை சரியான சாலை வசதி இல்லை. தங்கள் பகுதிக்கு தாா்சாலை அமைத்துதர வேண்டுமென, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் தாா்ச்சாலை அமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனா்.
இந்நிலையில் சட்டமன்ற தோ்தல் தேதி வெளியானதை அடுத்து, ஏமாற்றத்தில் இருந்த, உலிபுரம் பெருமாள்மலை அடிவாரப் பகுதியைச் சோ்ந்த மக்கள், 2026 சட்டமன்ற தோ்தலை புறக்கணிக்கின்றோம்’ என பேனா் வைத்துள்ளனா்.
மேலும், அந்த பேனரில், ’சரியான சாலை வசதி செய்துதரத் தவறிய, அரசியல் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளை நம்பத்தயாராக இல்லாததால்,எங்களிடம் எந்த வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவேண்டாம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையடுத்து, கெங்கவல்லி வருவாய்த்துறையினா், அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

தோ்தல் புறக்கணிப்பு: துப்பாக்குடி கிராம மக்கள் அறிவிப்பு

கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


