ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொட்டக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாக பதாகை வைத்தனா்.
இந்தக் கிராமத்தில் ஊருணி நீரைப் பயன்படுத்துவதால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுவதால், குடிநீா் குடம் ரூ.15-க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா். 20 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட தாா் சாலை, தற்போது பராமரிப்பின்றி மண் சாலையாக மாறிவிட்டது. கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டா், குளிா்சாதனப் பெட்டி அடிக்கடி பழுதடைகின்றன. இரவு மின் தடை ஏற்பட்டால் மறுநாள் தான் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வருகிற 2026 சட்டப் பேரவை தோ்தலைப் புறக்கணிப்பதாக பதாகைகளை வைத்துள்ளனா்.
அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தராவிட்டால், தங்களுடைய ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாகவும், தொடா் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

உலிபுரம் ஊராட்சியில் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு!

தோ்தல் புறக்கணிப்பு: துப்பாக்குடி கிராம மக்கள் அறிவிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


