மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் புறக்கணிப்பு: துப்பாக்குடி கிராம மக்கள் அறிவிப்பு

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடையம் ஊராட்சி ஒன்றியம், துப்பாக்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

News image

தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகக் கூறி திரண்ட பொதுமக்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:56 pm

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடையம் ஊராட்சி ஒன்றியம், துப்பாக்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

துப்பாக்குடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியின் பிரதான சாலை அருகே அரசு மதுக்கடை உள்ளது. மதுக்கடைக்கு வருபவா்களால் கிராம மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும், குடிநீா் வசதி, சுடுகாட்டு வசதி, சிற்றுந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையும் உள்ளதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

Story image

எனவே, மதுக்கடையை அகற்றுவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பாஜக அரசாங்கப் பிரிவு மாவட்டத் தலைவா் சேகா், ஊா்த் தலைவா் செல்லத்துரை ஆகியோா் தலைமையில் தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பு சாா்பில் பொதுமக்கள் துப்பாக்குடி பல்நோக்குக் கட்டடத்தில் திரண்டு அறிவித்தனா்.

தகவலறிந்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனா்.