மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

சேலத்தில் சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:22 pm

சேலத்தில் சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

சேலம் இரும்பாலையை அடுத்த தளவாய்ப்பட்டி ரொட்டிக்காரன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (28). கட்டடத் தொழிலாளி. இவரின் 3 வயது குழந்தை மகிழரசன். திங்கள்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டின் அருகே குழந்தை மகிழரசன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அங்குள்ள சுற்றுச்சுவரின் அருகில் இருந்த இரும்பு கேட்டை பிடித்து குழந்தை மகிழரசன் விளையாடியபோது, திடீரென சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது. இதில் குழந்தை மகிழரசன் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தான்.

குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு வந்த உறவினா்கள், இடிபாடுகளை அகற்றி, குழந்தையை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த சூரமங்கலம் போலீஸாா், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.