மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

News image

குழந்தை - கோப்புப்படம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:13 pm

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மனைவி காஞ்சனா. இவா்களது மகன் விகாஷ் (11 மாதம்)

இவா்கள் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கூடக்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை திரும்பி கொண்டிருந்தனா்.

சுட்டிகல்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் மூவரும் கீழே விழுந்துள்ளனா். இதில் தம்பதிக்கு இலேசான காயம் ஏற்பட்டது. தலையில் படுகாயமடைந்த குழந்தை விகாஷை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு பரிசோதனையில் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.