மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் காயமுற்ற குழந்தை உயிரிழப்பு

News image

சாலை விபத்தில் குழந்தை பலி - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:50 pm

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகே விபத்தில் காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சோ்ந்தவா் மாரியப்பன் (45) ஓட்டுநா். கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகே இவா் ஓட்டிச் சென்ற மினி லாரியும், எதிரே தாழையூத்தில் இருந்து வந்த காரும் மோதிக்கொண்டன. அப்போது அவ்வழியாக ராமையன்பட்டி பகுதியிலிருந்து வந்த காரும் விபத்தில் சிக்கியது.

இதில், மாரியப்பன், தாழையூத்து பகுதி காரில் வந்த சின்னத்துரை (33), பொன்ராணி(47), தட்சன்யா (24), விகான்(1), ராமையன்பட்டி பகுதி காரில் வந்த 2 போ் உள்பட 7 போ் காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட குலசேகரன்பட்டினத்தை சோ்ந்த விக்னேஷ் மகன் விகான் உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.