திருச்சி அருகே 5 மாதக் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், புங்கனூா் கீழவீதியைச் சோ்ந்தவா் முருகேசன் (39). இவரது மனைவிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்தது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு இந்தப் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அல்லித்துறை பகுதி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் முருகேசன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










