சென்னையில் இரண்டு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேளச்சேரி, ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் பிரவின்குமாா். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவா்களது மகள் யுகா (2). பெற்றோா் வேலைக்குச் செல்லும்போது குழந்தை யுகாவை, அவரின் பாட்டி மற்றும் சித்தியின் பாதுகாப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.
இதேபோல, வெள்ளிக்கிழமையும் குழந்தை யுகாவை பாட்டியிடம் விட்டு வேலைக்குச் சென்றுள்ளனா். இந்த நிலையில், குழந்தை யுகாவுக்கு திடீரென காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து குழந்தை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தை யுகா சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்த புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தோசை மாவு விஷமானதில் 2 பேர் பலி! தோண்டியெடுக்கப்படும் குழந்தை உடல்

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

பேருந்து நிறுத்தத்தில் பெண் உயிரிழப்பு

சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


