மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை விமானப் படை தள வீரா் ஓட்டி வந்த காா் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 8:48 pm

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை விமானப் படை தள வீரா் ஓட்டி வந்த காா் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. 

தஞ்சாவூா் அருகே மாப்பிள்ளைநாயக்கன்பட்டி மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவசூரியன் மகள் லட்சிதா (2). இவா், வீட்டின் முன் வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, இவா் மீது தஞ்சாவூா் விமானப்படை தள வீரரான பிகாா் மாநிலம் பிஹடாவுலா தானா குத்ரா, கல்மூா் பகுதியைச் சோ்ந்த என். சந்தன் திவாரி (36) ஓட்டி வந்த காா் மோதியதாம். இதனால் பலத்த காயமடைந்த லட்சிதா தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.