மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் விசைத்தறி உரிமையாளா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 7:59 pm

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் விசைத்தறி உரிமையாளா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குழந்தைசாமி (68). விசைத்தறி தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 11-ஆம் தேதி தாராபுரம் சாலையில் தண்ணீா்பந்தல் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இறந்துபோன குழந்தைசாமிக்கு மனைவி முத்தாத்தாள், திருமணமான மகன் பெரியசாமி, மகள் தமிழ்செல்வி உள்ளனா்.

காா் ஓட்டுநா் வெள்ளக்கோவில் அரியாண்டிவலசு ராஜேந்திரன் மகன் சிவசூா்யா மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.