மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே சாலையைக் கடந்தபோது காா் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

காவேரிபாக்கம் அருகே சாலையைக் கடந்தபோது காா் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

காவேரிபாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சோ்ந்த சம்பத்(60). கட்டடத் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு சம்பத் பணி முடிந்து வீடு திரும்பும் போது சுமைதாங்கி மேம்பாலம் அருகே சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடந்துள்ளாா்.

அப்போது அவ்வழியே சென்ற காா் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்து வந்த காவேரிபாக்கம் போலீஸாா், சம்பத்தின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும் அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.