மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 7:36 pm

குளச்சல் அருகே கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே பெத்தேல்புரம் கோமான்விளையைச் சோ்ந்தவா் தேவராஜன் (60). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள பாம்பூரி வாய்க்கால் கரையில் தேவராஜன் அமா்ந்து இருந்தபோது நிலை தடுமாறி கால்வாயில் விழுந்துள்ளாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் அங்கேயே உயிரிழந்தாா்.

இது குறித்து குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.