மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:14 pm

போ்ணாம்பட்டு அருகே காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சிந்தகணவாய் பகுதியைச் சோ்ந்தவா் சுகன்யா(34). இவா் ஏரிகுத்திஅருகே உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தாா். திருமணம் ஆகாதவா்.சுகன்யா திங்கள்கிழமை காலை வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளாா்.

அப்போது பெங்களூரில் இருந்து எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுகன்யா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போ்ணாம்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.