மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேருந்து நிறுத்தத்தில் பெண் உயிரிழப்பு

அரியூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண் திடீரென உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:34 pm

அரியூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண் திடீரென உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், அரியூா் அருகே ஸ்ரீபுரம் ஊசூா் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை 65 மதிக்கத்தக்க பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக அரியூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் ஆலங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி விஜயா என்பது தெரியவந்தது. எனினும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.