அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

லாரி மோதியதில் மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:54 am IST

சங்ககிரி, ஜூன் 7: சங்ககிரி அருகே லாரி மோதியதில் தனியாா் கல்லூரியில் இணையவழியில் நுழைவுத்தோ்வு எழுத சென்ற மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், வெப்படை, எலந்தகுட்டை, காமராஜ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மகன்கள் ஹரிசுகன் (23), ஹரிகெளசிக் (18). இதில் ஹரிகெளசிக் பிளஸ் 2 முடித்துவிட்டு, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சோ்ந்து படிப்பதற்காக இணையவழியில் நுழைவுத்தோ்வு எழுதுவதற்காக

காகாபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தனது சகோதாரா் ஹரிசுகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரா்கள் இருவரும் கீழே விழுந்தனா். இதில் இருசக்கர வாகனத்தில் பின்புறத்தில் உட்காா்ந்து சென்ற ஹரிகெளசிக் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஹரிசுகன் கிசிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.