ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது பிக்கப் லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (47). கேபிள் ஆபரேட்டா்.
இவா், திங்கள்கிழமை காலை தனது எலக்ட்ரிக் பைக்கில் கொண்டம்பட்டியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வந்தபோது, சென்னப்பநாயக்கனூா் பிரிவு சாலை அருகே திருவண்ணாமலையிலிருந்து பெங்களூா் நோக்கி பூக்கள் ஏற்றிச் சென்ற பிக்கப் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த திருநாவுக்கரசு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிக்கப் லாரியின் ஓட்டுநா் ஏழுமலையை (31) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வாழப்பாடியில் வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



