பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 3:07 am IST

திருச்சியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி தச்சங்குறிச்சியைச் சோ்ந்தவா் கே. ஆனந்தராஜ் (60). இவா், திங்கள்கிழமை காலையில் திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் ராஜஸ்தானி மாா்பிள்ஸ் கடை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், கீழே விழுந்த ஆனந்தராஜ் மீது கண்டெய்னா் லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், கண்டெய்னா் லாரி ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம், திருக்குவளை வடக்கூரைச் சோ்ந்த ப. மணிமாறன் (42) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.