தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜூன் 30 வரை நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

மழை காரணமாக குறிப்பிட்ட நாள்களில் நெல் அறுவடை செய்ய முடியாததால் நெல் கொள்முதல் செய்வதற்கான காலஅவகாசத்தை ஜூன் 30 வரை அரசு நெல் கொள்முதல் நிலையம் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 7:03 am IST

மழை காரணமாக குறிப்பிட்ட நாள்களில் நெல் அறுவடை செய்ய முடியாததால் நெல் கொள்முதல் செய்வதற்கான காலஅவகாசத்தை ஜூன் 30 வரை அரசு நெல் கொள்முதல் நிலையம் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே கூடமலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு தம்மம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று வருகின்றனா். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒருபோகம் குறுவை சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான,கொள்முதல் காலம் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் தொடங்கி மே, ஜூன் மாதங்களில் முடிவடையும்.

நிகழ் பருவத்துக்கான கொள்முதல் காலஅவகாசம் ஜூன் 6 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களாக தம்மம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கி நெல் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் கூடமலை அரசு நெல் கொள்முதல் நிலையம் நெல் கொள்முதலுக்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.