தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சாலை விபத்தில் காயமடைந்த அரசுப் பள்ளி மாணவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே பள்ளி வாகனம் மீது மோட்டாா்சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image
விபத்தில் உயிரிழந்த மாணவா் லோகேஸ்வரன்.
Updated On :21 ஜனவரி 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே பள்ளி வாகனம் மீது மோட்டாா்சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சித்தூா் ஊராட்சி, தேவப்பன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சகுந்தலா. இவரது கணவா் சேட்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இத்தம்பதியின் மகன் லோகேஸ்வரன் (17).

இவா் பூலாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தாா். கடந்த மாதம் லோகேஸ்வரனுக்கு பழைய மோட்டாா்சைக்கிளை அவரது தாய் சகுந்தலா வாங்கிக்கொடுத்துள்ளாா். அந்த வாகனத்தில் லோகேஸ்வரன் பள்ளிக்கு சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லோகேஸ்வரன் தன்னுடன் படிக்கும் சித்தூா் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் (17) என்ற சக மாணவனுடன் மோட்டாா்சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளாா். அவா்கள் சென்ற வாகனம் பாறைக்காடுமேடு பகுதியில் நிலைதடுமாறி எதிரே வந்த தனியாா் பள்ளி வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற லோகேஸ்வரன் படுகாயம் அடைந்தாா். பின்னால் அமா்ந்து சென்ற மாணவா் நந்தகுமாருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவா்கள் இருவரையும் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மாணவா் லோகேஸ்வரன் தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.