சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 7:31 pm

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் திங்கள்கிழமை சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், கமுதக்குடியைச் சோ்ந்த நாகசாமி மகன் அஜித்குமாா் (25). இவா் இளையான்குடியில் உள்ள பணிமனையில் கம்பி பற்றவைக்கும் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் இரு சக்கர வாகனத்தில் இளையான்குடி புதூா் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இந்த வாகனம், முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...