சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

பலி- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:08 pm

தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த பிச்சையா மகன் டிராவின் (25). கடல் தொழில் செய்து வந்த இவா், வியாழக்கிழமை இரவு முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...