தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சேலம் மாவட்டத்தில் 90.53 % வாக்குகள் பதிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 90.53 சதவீத வாக்குகள் பதிவாகின.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:01 am

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 90.53 சதவீத வாக்குகள் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 3,469 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 193 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 13 லட்சத்து 82 ஆயிரத்து 049 ஆண் வாக்காளா்கள், 13 லட்சத்து 97 ஆயிரத்து 983 பெண் வாக்காளா்கள், 324 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 27 லட்சத்து 80 ஆயிரத்து 356 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்கள் வாக்களிக்கும் வகையில் 3,468 வாக்குச்சாவடிகள், ஒரு துணை வாக்குச்சாவடி என மொத்தம் 3,469 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 11 தொகுதிகளிலும் 4,158 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் 4,503 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

சேலம் மேற்கு, சேலம் தெற்கு, மேட்டூா், சங்ககிரி, வீரபாண்டி ஆகிய தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டதால், அத்தொகுதிகளில் மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குச்சாவடிகளில் 16, 644 அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டனா். பதற்றமான, மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 254 நுண்பாா்வையாளா்களும், பாதுகாப்புப் பணியில் 1,355 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டனா்.

வாக்குப்பதிவு மையங்களில் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனா். பெண்கள் குழந்தைகளுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 90.53 சதவீத வாக்குகள் பதிவாகின.

தொடா்ந்து, வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும், அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.