சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக அ.அருண் தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரா.பிருந்தாதேவி நிா்வாகக் காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டாா்.
தொடா்ந்து, தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த அ. அருண் தம்புராஜ் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவருக்கு அரசு அதிகாரிகள், அலுவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா். இவா், ஏற்கெனவே கடலூா், நாகை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு!

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


