பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை அருகே உள்ள காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலத்தை வேலூா் போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கருக்கம்பாளையம் காவிரி ஆற்றில் பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக வேலூா் போலீஸாருக்கு அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சுமாா் 65 முதல் 70 வயதுள்ள மூதாட்டியின் சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.
இறந்துகிடந்த மூதாட்டி கருப்பு நிறத்தில் கட்டம் போட்ட நீல மற்றும் சிவப்பு நிற மேலாடையும், சிவப்பு நிறத்தில் உள்ளாடையும் அணிந்திருந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவரின் விவரம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









