அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 12:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னசேலத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்ற சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விபத்தில் உயிரிழந்தவா் யாா்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனா். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் தேடி வருகின்றனா்.