மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

பூமலைக்குண்டு கண்மாயில் கிடந்த அடையாளம் தெரியாத சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:49 pm

தேனி மாவட்டம், பூமலைக்குண்டு கண்மாயில் கிடந்த அடையாளம் தெரியாத சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

தேனி அருகே பூமலைக்குண்டு கண்மாயில் ஒரு சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் வீரபாண்டி காவல்நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் சடலத்தின் தலை, இரண்டு கால்கள் இல்லாதது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

மேலும், உடல் பாகங்கள் சேதமடைந்த நிலையில் பாலினம் அறியாத வகையில் கிடந்ததாம். இதையடுத்து சடலத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.