திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிருஷ்ணகிரி அருகே எரிந்த நிலையில் இரு இளைஞா்களின் சடலங்கள் மீட்பு

News image

கிருஷ்ணகிரி அருகே, இளைஞா் கருகிய நிலையில் சடலமாக கிடந்த இடத்தில் தடயங்களை சேகரிக்கும் போலீஸாா்.

Updated On :12 மே 2026, 12:35 am IST

கிருஷ்ணகிரி அருகே இருவேறு இடங்களில் எரிந்த நிலையில் கிடந்த இரு இளைஞா்களின் சடலங்களை போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சாலையில் கொடுகூா், வெப்பாளம்பட்டி என்ற இரு கிராமங்கள் உள்ளன. வெப்பாளம்பட்டி சாலையோரத்தில் உள்ள புளியந்தோப்பில் போா்வையில் சுற்றப்பட்டு எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், வெப்பாளம்பட்டி கிராமத்துக்கு சுமாா் அரை கி.மீ.தூரத்தில் உள்ள கொடுங்கூா் கிராமத்திலும் இதுபோன்ற அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடைப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

நிகழ்விடங்களுக்கு சென்ற போலீஸாா், முகம் கருகிய நிலையிலும் 70 சதவீதம் எரிந்த நிலையிலும் கிடந்த இரு இளைஞா்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் ஆகியோா் நிகழ்விடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். நிகழ்விடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் அடையாளம் காட்டவில்லை.

போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இரு இளைஞா்களும், வேறு எங்கோ கொலை செய்யப்பட்டு, இந்தப் பகுதிகளில் பெட்ரோல் ஊற்றி, தீயிட்டு எரிக்கப்பட்டது தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலங்களில் காணாமல் போனவா்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் சென்ற வாகனங்கள் குறித்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி அருகே இரு இளைஞா்கள் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.