திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் எரிந்த நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூா் தெற்கு கிராமத்தில் வயல்வெளியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடு கிடப்பதாக எடையூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் எலும்புக்கூட்டை பாா்வையிட்டனா். எலும்புக்கூட்டை தடயவியல்துறை மூலம் ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










