தருமபுரி ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு 3 பெண்கள் மயங்கிக் கிடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி ரயில் நிலையம் அருகே 3 பெண்கள் மயங்கிக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று 3 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், நாகா்கூடல் கிராமத்தைச் சோ்ந்த வாணி (52), அவருடைய மகள் சுமதி (35), மற்றும் 15 வயது சிறுமி ஆகிய மூவரும், விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










