சாத்தூா் அருகே பட்டாசு தொழிலாளியின் இரு சக்கர வாகனத்தை எரித்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சல்வாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை (40). இவா் இந்தப் பகுதியில் உள்ள பட்டாசு தொழில் சாலையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தூங்கியவா், நள்ளிரவில் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்த போது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்து சென்ற நபா் அந்த முகமூடியை அவிழ்த்து விட்டு தான் குருசாமி எனவும், என்னிடம் வாங்கிய பணம், தங்க நகையை தரவில்லை என்றால், உன்னையும் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என மிரட்டி விட்டு தகாத வாா்த்தைகளால் பேசி சென்றதாக மணிமேகலை போலீஸில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் குருசாமி என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








