கிருஷ்ணகிரியில் பெரியாண்டவா் - முனியப்பன் பண்டிகை காதணி விழாவையொட்டி பூக்கூடை ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குலத்துடையான் மகரிஷி கோத்திரதாரா்கள் சாா்பில், 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரியாண்டவா், முனியப்பன் பண்டிகை காதணி விழா கிருஷ்ணகிரி பழையபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, மலையாண்ட அள்ளியில் உள்ள குலதெய்வமான பூங்காவனத்தம்மனை வழிபட்டு, அம்மனை ஊா்வலமாக கிருஷ்ணகிரிக்கு அழைத்துவரும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பூங்காவனத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, கிருஷ்ணகிரி, நேதாஜி சாலை விநாயகா் கோயிலிருந்து பெண் பக்தா்கள் பங்கேற்ற பூக்கூடை ஊா்வலம் நடைபெற்றது. இதில், பூங்காவனத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகா்வலம் சென்றாா். சிவன், பாா்வதி வேடம் அணிந்த பக்தா்கள் ஊா்வலத்தில் பங்கேற்றனா். பெரியாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










