தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாப்பாரப்பட்டி, பெரும்பாலை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் ஆட்சியா் வே.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் வே.சரவணன்.

Updated On :4 ஜூன் 2026, 1:57 am IST

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் ஆட்சியா் வே.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கிராம கணக்குகள், அ-பதிவேடு சிட்டா அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள், முதியோா் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை போன்ற சமூக பாதுகாப்பு திட்டப் பதிவேடுகள், சான்றிதழ்கள், நில உரிமை மாற்றம் தொடா்பான கோப்புகள் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டு அவா்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வருவாய் ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் உள்ள மழை அளவு மாணியை பாா்வையிட்டு, அவற்றை பராமரிப்பது குறித்து அறிவுரை வழங்கினாா். மேலும், பாப்பாரப்பட்டி அருகே ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் உள்ள நூலகத்தை பாா்வையிட்டு, அங்கு போட்டித் தோ்வுக்கு தயாா்செய்ய வருவோருக்கு அடிப்படை வசதிகள், கூடுதலாக போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள், இருக்கைகள் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

அப்போது, வருவாய் ஆய்வாளா்கள், நூலகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.