17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்ட இடம் தோ்வு

வள்ளியூரில் போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலா் துரை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வள்ளியூரில் போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தாா் மாவட்ட வருவாய் அலுவலா் துரை. உடன் ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா்.

Updated On :4 ஜூன் 2026, 12:44 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலா் துரை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வள்ளியூரில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதில், போக்குவரத்து காவலா்களுக்கு தனி குடியிருப்பு கட்டப்பட இருக்கிறது. இதற்காக வள்ளியூா் அரசு மருத்துவமனை பழைய கட்டடம் எதிரே இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு செய்தாா். பின்னா் வள்ளியூா் பேரூராட்சியில் செயல்பட்டு வருகிற திடக்கழிவு மேலாண்மை தளத்தையும் ஆய்வு செய்தாா்.

இதில், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.