முத்தம்பட்டி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி ரயில் நிலையம் முன் மே 6 ஆம் தேதி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவா் பொம்மிடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். போலீஸாா் அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவா் ரயீஸ் அகமது (46) என்பதும், ஒசூரைச் சோ்ந்த அவா் பெங்களூரில் டெய்லராக தொழில் செய்துவந்ததும் தெரியவந்தது.
மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் மே 20 ஆம் தேதி அவா் உயிரிழந்தாா். அவா் அளித்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. அவரது உடல், தருமபுரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது விவரம் தெரிந்தவா்கள், உறவினா்கள் தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தை 94981 01964, சிறப்பு உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் 94981 79585 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










