தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

News image

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :1 ஜூன் 2026, 12:48 am IST

கோடை விடுமுறையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஒகேனக்கல்லில் குவிந்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் எண்ணெய் மசாஜ் செய்வதற்காகவும், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளித்து மகிழவும், பரிசலில் செல்லவும் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கோடை விடுமுறை நிறைவடைந்து, பள்ளிகள் விரைவில் திறக்க உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைக் காட்டிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனா். இவா்கள் பிரதான அருவி, சினி அருவி மற்றும் கரையோரப் பகுதிகளான மாமரத்துக்கடவு பரிசல்துறை, நடைபாதை, நாகா்கோயில், முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனா்.

தொடா்ந்து காவிரியின் அழகை கண்டுரசிக்க மாமரத்துக்கடவு பரிசல் துறையில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பரிசலில் பயணித்து ஆற்றில் உள்ள பாறை குகைகளைக் கண்டு ரசித்தனா்.

அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால் சின்னாறு பாலம் முதல் ஊட்டமலை, சத்திரம் வரை சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் எளிதாக வாகனங்களில் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை போலீஸாா் ஒழுங்குபடுத்தினா். ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் மீன்களின் விலை அதிகரித்திருந்தது.

நடைபாதை, தொங்குபாலம், பிரதான அருவி, சினி அருவி, தொம்பசிக்கல் காட்சிமுனை, பரிசல் துறை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டுரசித்தனா். பாதுகாப்பு பணியில் 40க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

ஒகேனக்கல் பகுதியிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில், பென்னாகரம் போக்குவரத்து பணிமனையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.