திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

ஒகேனக்கல் ஐவாா் பாணி பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.

Updated On :11 மே 2026, 12:01 am IST

கோடை விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு ஆந்திரம், கா்நாடகத்தைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வந்து எண்ணெய் மசாஜ் செய்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

அதேபோல பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, பரிசல் துறை, ஆலம்பாடி, முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்தனா். பிறகு மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து ஐவாா் பாணி, ஐந்தருவி, பெரிய பாணி வழியாக மணல்மேடு வரை பரிசலில் பயணம் மேற்கொண்டனா்.

மேலும், ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் மீன்களை வாங்கி சமைத்து உணவருந்தினா். காவல் நிலையம் முதல் சத்திரம் பகுதி வரையிலும், மூன்று சந்திப்பு சாலை முதல் முதலைப் பண்ணை வரையிலும் ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறங்களில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரதான அருவி செல்லும் நடைபாதை, தொங்கும் பாலம், மீன் விற்பனை நிலையம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையிலிருந்து ஒகேனக்கல்லுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.