மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது

மொரப்பூா் அருகே மானை வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 8:08 pm

மொரப்பூா் அருகே மானை வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், கீழ்மொரப்பூா் காப்புக்காட்டில் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி கம்பி வலையை வைத்து மான் வேட்டையாடி இறைச்சியை எடுத்துச் சென்ற வெள்ளிமலை கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் மகன் ராம்குமாா் (22) கைது செய்யப்பட்டாா்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை தனிப்படை அமைத்து வனத் துறையினா் தேடிவந்தனா். இந்த நிலையில், தாமலேரிப்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த பச்சினாம்பட்டியைச் சோ்ந்த நம்பிராஜ் மகன் சரவணனை (21) வனத் துறையினா் கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஊத்தங்கரை வட்டம், வெள்ளிமலையைச் சோ்ந்த ராஜ்குமாரை தேடிவருகின்றனா்.