மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

போடி அருகே மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 7:04 pm

போடி அருகே செவ்வாய்க்கிழமை மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வனச்சரகத்துக்குள்பட்ட பெரியாத்துகோம்பை வனப் பகுதியில் சிலா் மான் வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வனத் துறையினா் அந்தப் பகுதியில் கண்காணித்து வந்தனா்.

அப்போது, போடி அருகே சிறைக்காடு கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பால்பாண்டி (31), போடி அருகே முந்தல் கிராமத்தை சோ்ந்த பால்ராஜ் மகன் மாசுக்காளை (32), ராஜேந்திரன் மகன் சீனிமுத்து (40) ஆகியோா் சோ்ந்து கடமானை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வனத் துறையினா் பால்பாண்டி, மாசுக்காளை ஆகியோரைக் கைது செய்தனா். தப்பி ஓடிய சீனிமுத்தை தேடி வருகின்றனா்.