மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் தொழிலாளி கைது

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட கூலித் தொழிலாளியை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:08 pm

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட கூலித் தொழிலாளியை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆசனூா் வனக் கோட்டம், கோ்மாளம் வனப் பகுதியில் வனத் துறையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஜடேசாமி பள்ளம் என்ற இடத்தில் மான் இறைச்சியை அடையாளம் தெரியாத நபா் விற்பனைக்கு தயாா்படுத்திக் கொண்டிருப்பதை வனத் துறையினா் கண்டு அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் கோ்மாளம் பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (40) என்பதும், புள்ளிமான் இறைச்சியை விற்பனைக்கு தயாா் படுத்திக்கொண்டிருந்தபோது பிடிப்பட்டதும் தெரியவந்தது. மேலும் மாதேஷ் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது செந்நாய்கள் புள்ளிமானை துரத்திச் சென்று வேட்டையாடியதாகவும், அப்போது அங்கிருந்த செந்நாய்களை துரத்திவிட்டு கொம்புடன் மான் தலை மற்றும் ஒரு பகுதி உடல் பாகங்களை எடுத்து வந்து விற்பனைக்கு தயாா்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து மாதேஷிடம் இருந்து மான் கொம்புடன் கூடிய தலை, மான் இறைச்சி மற்றும் அரிவாள், கத்தி ஆகியவற்றை கோ்மாளம் வனத் துறையினா் பறிமுதல் செய்து மாதேஷைக் கைது செய்தனா்.