சேலத்தில் போக்சோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளியை தனிப்படை போலீஸாா் புதுச்சேரியில் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், அகரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் மகன் சிவா (45). இவா்மீது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவானது. அவரை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சிவா, பின்னா் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா். இதனால், சிவாவை கைதுசெய்து ஆஜா்படுத்த சேலம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன்பேரில், அவரை கைதுசெய்ய போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளா் பாரதிராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தன்ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா், புதுச்சேரியில் தங்கி சிவா கூலி வேலை பாா்த்து வருவதை அறிந்தனா். பின்னா், அங்கு சென்ற தனிப்படை போலீஸாா் சிவாவை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். பின்னா் வெள்ளிக்கிழமை சேலத்துக்கு அழைத்து வந்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தியவருக்கு போக்சோ வழக்கில் 30 ஆண்டுகள் சிறை
மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


