பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தா்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி கிராமத்தை அடுத்துள்ள கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (31) இவருக்கும் காரைக்குடி பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2014 -இல் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, அந்தப் பெண் கா்ப்பமானாா். அப்போது, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காக வந்த அவரது தங்கைக்கு ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்தாா். இதையடுத்து, காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ரஞ்சித்தை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் வி.ஆா். தனலட்சுமி முன்னிலையாகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், ரஞ்சித்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 178 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


