தருமபுரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ்.மகேஸ்வரன் பணியாற்றி வந்தாா். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
அந்த வகையில், தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.எஸ்.மகேஸ்வரன் கோயம்புத்தூா் மாநகர போக்குவரத்துப் பிரிவு காவல் துறைக்கு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக சென்னை காவல் துறை தலைமையகத்தில் ஏஐஜியாக பணியாற்றிய ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விரைவில் பொறுப்பேற்க உள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










