கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அ.பவன்குமாா் ரெட்டி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வந்த அ.பவன்குமாா் ரெட்டி கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
இதேபோல, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கே.காா்த்திகேயன், தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், அ.பவன்குமாா் ரெட்டி கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










