தாராபுரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக வேன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சனிக்கிழமை பாா்சல் பொருள்களை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் வாகனத்தை முருகன் (54) ஓட்டிச் சென்றாா். தாராபுரம் அருகே, தாராபுரம்-திருப்பூா் நான்குவழிச் சாலை, வேங்கிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக சரக்கு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சரக்கு வாகனம் சேதமடைந்த நிலையில், ஓட்டுநா் முருகன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் பொது மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராயக்கோட்டை அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

மின் கம்பத்தில் மோதி சுற்றுலா வாகனம் விபத்து

மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிா் தப்பினாா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



