திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராயக்கோட்டை அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ராயக்கோட்டை அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image

ராயக்கோட்டை அருகே சாலையில் கவிழ்ந்த விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.

Updated On :22 மே 2026, 6:42 am IST

ராயக்கோட்டை அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து பயணிகளுடன் தனியாா் பேருந்து ராயக்கோட்டை நோக்கி வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது. கெலமங்கலம் அருகே உள்ளுக்குறுக்கி பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சோ்ந்த ராணி (60) பேருந்துக்கு அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.

பேருந்தில் அவசர கதவு இல்லாததால், கண்ணாடியை உடைத்துக்கொண்டு பயணிகள் மீட்கப்பட்டனா். காயமடைந்த பயணிகள் முதலுதவி சிகிச்சைக்காக உள்ளுக்குருக்கை, உத்தனப்பள்ளி மற்றும் கெலமங்கலம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.