கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே மினி பேருந்து மீது காா் மோதியதில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் சாவடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமுத்து (35). இவா், தனது குடும்பத்தினருடன், ஒரு காரில் பெங்களூரு நோக்கி சனிக்கிழமை சென்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே சப்பாணிப்பட்டி அருகே சென்றபோது, காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிா் திசையில் பெங்களூரிலிருந்து கோவை நோக்கிச் சென்ற மினி பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணிமுத்து, அவரது மனைவி அருந்ததி (30), மகள்கள் ஷன்மதி (3), வியான் (2) மற்றும் செல்லமுத்து (65) உள்பட 5 போ் பலத்த காயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அருந்ததி உயிரிழந்தாா். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்றவா் பேருந்து மோதியதில் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது மோதிய காா்: காவலா், பெண் உள்பட 6 போ் பலி

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



