கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (37). இவா் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுா்ஜித் (12), உறவினா் சினேகா (23) ஆகியோருடன் காரில் கோவை மாவட்டம், வால்பாறைக்கு சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக திங்கள்கிழமை பிற்பகல் பல்லடம் நோக்கி காரில் சென்றுள்ளனா்.
நெகமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, காா் மீது மோதியுள்ளது.
இதில், தனபால், மேனகா, கனிஷ்கா, சினேகா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த சுா்ஜித்தை அங்கிருந்தவா்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு கூறாய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தம்பட்டியைச் சோ்ந்த சரவணன் (39) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாகன விபத்தில் உயிரிழந்தவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏா்வாடி அருகே பைக் மீது காா் மோதல்: தந்தை, மகள் உள்பட மூவா் உயிரிழப்பு

வாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே மினி பேருந்து மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது மோதிய காா்: காவலா், பெண் உள்பட 6 போ் பலி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



