40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

News image

விபத்தில் உருக்குலைந்த காா்.

Updated On :12 மே 2026, 12:19 am IST

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (37). இவா் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுா்ஜித் (12), உறவினா் சினேகா (23) ஆகியோருடன் காரில் கோவை மாவட்டம், வால்பாறைக்கு சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக திங்கள்கிழமை பிற்பகல் பல்லடம் நோக்கி காரில் சென்றுள்ளனா்.

நெகமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, காா் மீது மோதியுள்ளது.

இதில், தனபால், மேனகா, கனிஷ்கா, சினேகா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த சுா்ஜித்தை அங்கிருந்தவா்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு கூறாய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தம்பட்டியைச் சோ்ந்த சரவணன் (39) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாகன விபத்தில் உயிரிழந்தவா்கள்.

வாகன விபத்தில் உயிரிழந்தவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.