/

சாலையை கடக்க முயன்றவா் பேருந்து மோதியதில் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:48 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றவா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

மானாமதுரை அருகே வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி(50). இவா் அருகேயுள்ள முத்தனேந்தல் என்ற இடத்தில் மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியாக மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வீரமணி மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.